குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைபோன்று

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று (04) வழமைபோன்று இடம்பெறுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப் காரணமாக, இன்றைய தினம் அத்தியாவசிய சேவை மற்றும், ஏனைய சேவைகளுக்காக விஜயம் செய்வதை தவிர்த்து கொள்ளுமாறு நேற்று (03) பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக திணைக்களத்தின் ஒரு நாள் சேவையில் தாமதம் ஏற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது . இருப்பினும் தற்பொழுது இந்த திடீர் செயலிழப்பு சரிசெய்யப்பட்டு வழமையான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.