முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33வது ஆசனம் நாடாளுமன்ற பிரதானிகளால் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அந்த ஆசனத்திலேயே இன்று அவர் அமர்ந்திருந்தார்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சபையில் ஆளும் கட்சியின் முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.