ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ரூபாய் 170 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் வந்து தரிசனம் செய்யும் புண்ணியஸ்தலமாகும்.
மேலும் உலகின் மிக நீண்ட பிராகாரம் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ரூ.170 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.