பாராளுமன்றத்தில் இன்றும் ,சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மீதான விவாதம்

பாராளுமன்றம் மீண்டும் ,இன்று (06) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

வழமையான அலுவல்களையடுத்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்றும் இடம்பெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் நிதியமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (06)  இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.