அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா.. சுவாமி-அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளினர்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பூமாலை அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமியும், அம்மனும் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தொடர்ந்து, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.