ஐம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில்  அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  3 பயங்கவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 மூன்று பயங்கரவாதிகளும் ஹிஜாபுல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக  காஷ்மீர் பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்… பாம்பு தோலுடன் புரோட்டா பார்சல் வழங்கிய ஓட்டல்- வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.