ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் நேற்றிரவு டங்., டங்., சத்தம்.! மயிலாடுதுறை சிராஜ் தீனை கட்டிவைத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்,!

ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் புகழ்பெற்ற பூவராக சுவாமி உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இந்த கோவில் உண்டியலை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது.

அப்போது கோவில் பணியில் இருந்த காவலாளி உடனடியாக திருடன் வந்ததை உறுதி செய்,து சத்தம் போட்டுள்ளார்.

இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் சேர்ந்து அந்த திருடனை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரை அங்கேயே கட்டி வைத்து, போலீசார் வந்ததும் திருடனை ஒப்படைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த திருடன் மயிலாடுதுறையை சேர்ந்த சிராஜ் தீன் என்பது தெரியவந்துள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.