ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு டில்லி சென்ற போலீஸ் குழுவினர்| Dinamalar

உடுப்பி, : அமைச்சர் பதவியிலிருந்து ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய காரணமான ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கு தொடர்பாக, உடுப்பி போலீசார் குழுவினர் டில்லிக்கு சென்றுள்ளனர்.அரசு ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டீல், பணிகளுக்கான பில் தொகையை கொடுக்க, 40 சதவீத கமிஷன் கேட்பதாக சிலர் மீது குற்றஞ்சாட்டி விட்டு, உடுப்பியின் லாட்ஜில், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இவ்வழக்கில், ஈஸ்வரப்பாவின் பெயர் அடிபட்டதால், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவ்வழக்கு தொடர்பாக, தீவிர விசாரணை நடந்து வருகிறது.சந்தோஷ் தற்கொலைக்கு முன், டில்லியில் ஊடகத்தினர் சந்திப்பு நடத்தினார். இதற்கான ஏற்பாட்டை செய்து கொடுத்தது யார் என்பது பற்றி, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இவரது தற்கொலை பின்னணியில், பெங்களூரு, பெலகாவியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சந்தோஷ் டில்லிக்கு சென்றது எப்படி; அங்கு யார், யாரை சந்தித்தார்; அப்போது நடந்த உரையாடல் என்ன; ஊடகத்தினரை சந்திக்க வசதி செய்து கொடுத்தது யார் என்ற கேள்விகளுக்கு விடை காண, உடுப்பி போலீஸ் குழுவினர், டில்லி சென்றுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.