27 மாவட்டங்களில் பாதிப்பில்லை தமிழகத்தில் 64 பேருக்கு கொரோனா: உயிரிழப்புகள் ஏதும் இல்லை

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில்  நேற்று 17,701 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 64 பேருக்கு  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று  சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,15,718 ஆக  உயர்ந்துள்ளது. மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட  உயிரிழக்கவில்லை. மேலும் மற்ற 27 மாவட்டங்களில்  பாதிப்பு ஏதும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.