சென்னை: திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூலாகும். அவரின் பிறந்த நாளை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரையில்) அமைந்துள்ள ராபர்ட் கால்டுவெல்லின் உருவச் சிலைக்கு இன்று காலை 9 மணியளவில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செய்யப் படும்.