சிதம்பரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போதே தீப்பற்றி எரிந்த பல்சர் பைக்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த பல்சர் என்.எஸ் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது.

புதுச்சேரியைச் சேர்ந்த திருமலை என்பவர் கீழ்பூவானிகுப்பத்தில் உள்ள தமது விளைநிலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீட்டிற்கு புறப்பட்ட நிலையில், சிறிது தூரத்திலேயெ பைக்கின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வந்ததாக கூறப்படுகிறது.

சுதாரித்துக் கொண்டு திருமலை உடனடியாக கீழே இறங்கியபோது, பைக் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.