புதுச்சேரி : தனியார் நிறுவன அதிகாரியை தாக்கிய ஓட்டல் ஊழியர் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்தவர் பால்ராஜி மகன் பத்மநாபன், 33; சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வள அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.கடந்த 13ம் தேதி புதுச்சேரி வந்த அவர், இ.சி.ஆர்., லதா ஸ்டீல் அவுஸ் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உணவு சாப்பிட்டார்.
அப்போது உணவு சேவையில் குறை இருப்பதை பத்ம நாபன் சுட்டிக்காட்டினார்.இதுதொடர்பாக, அவருக்கும், ஓட்டல் ஊழியர் களுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர் அனியா முபி, 35, பத்மநாபனை தாக்கினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், 24ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதுகுறித்து பத்மநாபன் நேற்று கொடுத்த புகாரின்பேரில், ஓட்டல் ஊழியர் அனியா முபி, கடை உரிமையாளர் சாதிக், 30, ஆகியோர் மீது டி.நகர் போலீசார் இரண்டு பிரிவு களில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி : தனியார் நிறுவன அதிகாரியை தாக்கிய ஓட்டல் ஊழியர் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்தவர் பால்ராஜி மகன் பத்மநாபன், 33;
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.