பயங்கரவாதத்தின் மையமாக கேரளா மாறியுள்ளது: பா.ஜ.,| Dinamalar

கோழிக்கோடு : ‘இடதுசாரிகள் ஆட்சியில், கேரளா, முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டது’ என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

கேரளாவில், கோழிக்கோடில் நேற்று நடந்த பா.ஜ., பொது கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:கேரளா கடவுளின் பூமி என போற்றப்பட்டது எல்லாம் பழைய கதை. பரசுராமரால் உருவாக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது, இடதுசாரிகள் ஆட்சியில், முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டது.

பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநிலத்தில் முஸ்லிம் மதமாற்றங்களும் அதிகரித்துள்ளன. இது பற்றி, கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களே கவலை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.