நுங்கு வெட்ட பனைமரம் ஏறிய மாணவர் தவறி விழுந்து பலி| Dinamalar

திருபுவனை : பாகூர் அருகே உள்ள மணமேடு பெரியார் தெருவில் வசிப்பவர் சுந்தரம். இவரது மகன் அபிசுதன், 21; லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக் கல்லுாரியில் பி.எஸ்.சி., சோசியாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.திருபுவனை பெரியபேட், தென்னஞ்சாலை வீதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த அபிசுதன், கடந்த 4ம் தேதி, மதகடிப்பட்டு பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்ட ஏறியுள்ளார்.

மரத்தின் உச்சியில் ஏறும்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அபிசுதனை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அபிசுதன் இறந்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.