டெல்லி முதல்வரை விமர்சித்து பதிவிட்ட பாஜக தலைவர் கைது…மாலையில் விடுவிப்பு.!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக-வைச் சேர்ந்த தஜிந்தர் சிங்கை அவரது இல்லத்தில் இருந்து நேற்று அதிகாலை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து பஞ்சாப் போலீசார் மீது டெல்லி போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

பஞ்சாப் மாநிலம் மொஹலிக்கு அழைத்துச்செல்லும் வழியில் ஹரியானாவில் டெல்லி போலீசார் பஞ்சாப் போலீசார் வாகனத்தை மடக்கி சுற்று வளைத்து தஜிந்தர்சிங்கை பஞ்சாப் போலீசாரிடமிருந்து மீட்டனர். 

அவரை கைது செய்த போலீசார் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

ஹரியானாவின் குருகிராம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட தஜிந்தரை நீதிபதி ஜாமீனில் விடுதலை செய்ததையடுத்து மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நேற்று நள்ளிரவு தஜிந்தர்சிங் வீடு திரும்பினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.