ம.பி தீ விபத்து, மதுரா சாலை விபத்து- பிரதமர் மோடி இரங்கல்

புது டெல்லி:
மத்திய பிரதேசம் இந்தூரில் ஸ்வார்ன் பாக் காலனியில் அமைந்துள்ள 2 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்தது. இதில் காலை 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதேபோல இன்று உத்தரப்பிரதேசம் மதுரா விரைவுச்சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருடன் நான் எப்போதும் இருப்பேன், படுகாயம் அடைந்தவர்களின் உடல்நிலை சரியாகி வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.