பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை தங்கவயல் வருகிறார் அண்ணாமலை| Dinamalar

தங்கவயல் : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தங்கவயலில் நாளை நடக்கும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தருவதால், தொண்டர்களிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், தமிழக பா.ஜ., தலைவருமான அண்ணாமலை, நாளை (8 ல்) தங்கவயல் வருகிறார்.

உரிகம்பேட் அசோக்நகர் சாலையில் உள்ள முனீஸ்வரா கோவில் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.பின், ராபர்ட்சன்பேட்டை பிரிட்சர்ட் சாலையின் வாஜ்பாய் சதுக்கத்தில், தங்கவயல் பா.ஜ., ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் காலை 10:00 மணிக்கு பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.தோட்டக்கலை துறை மற்றும் கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனிரத்னா, தொகுதி பா.ஜ., – எம்.பி., முனிசாமி, மாவட்ட தலைவர் வேணுகோபால், தங்கவயல் நகர தலைவர் கமல்நாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

தங்கவயலுக்கு முதல் முறையாக அண்ணாமலை வருவதால், அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளிக்க உள்ளூர் தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.நகர் முழுதும் கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டி, காவிமயமாக மாற்றி வருகின்றனர். அவர் வருவதால், தொண்டர்களிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.