பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றம்

சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிக்காக நான்காம் கட்ட தற்காலிக போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
பூந்தமல்லி டிரங்க் சாலையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை, மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
image
இதையொட்டி, இன்று முதல் 9-ம் தேதி வரை போரூர் — பூந்தமல்லி வழித்தடம், மாங்காடு — பூந்தமல்லி வழித்தடம், குமணன்சாவடி -பூந்தமல்லி வழித்தடம், ஆவடி மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் சென்னீர்குப்பம் வழியில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் சோதனை ஓட்டத்துக்கு பிறகு நடைமுறைக்கு சரியாக வந்தால், மாற்றம் அமலில் இருக்கும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.