வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் – தமிழகத்திற்கு மழை?

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நாளை புயலாக வலுப்பெற்று, 10 ஆம்தேதி ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 8 ஆம்தேதி புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து 10 ஆம்தேதி மாலை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரையையொட்டிய வங்கக்கடலில் நிலவும் என்றும் பின்னர், ஒடிசா கடற்கரையையொட்டி மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் ஒடிசா அல்லது ஆந்திராவில் கரையை கடக்காமல், கடற்கரைக்கு இணையாக பயணிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

image
இதற்கிடையே தமிழ்நாடு, புதுச்சேரியில், 8 ஆம்தேதி சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 9 ஆம்தேதி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: ஊட்டி கோடை விழா: கோத்தகிரியில் கோலாகலமாக தொடங்கிய காய்கறி கண்காட்சிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.