கொழும்பு ஆமர் வீதியில் முக்கிய சந்தியொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல வீதிகளை மூடியுள்ளனர். இதனால் குறித்த வீதிகள் ஊடான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
தமக்கு எரிவாயு கிடைக்கும் வரையில் தாம் இங்கிருந்து செல்லப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், அப்பகுதியில் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.