கொழும்பின் முக்கிய சந்தியில் வீதிகளை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! போக்குவரத்து ஸ்தம்பிதம் (Live)


கொழும்பு ஆமர் வீதியில் முக்கிய சந்தியொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல வீதிகளை மூடியுள்ளனர். இதனால் குறித்த வீதிகள் ஊடான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

தமக்கு எரிவாயு கிடைக்கும் வரையில் தாம் இங்கிருந்து செல்லப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

முதலாம் இணைப்பு

கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், அப்பகுதியில் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.