புதுடில்லி:”நீதிபதிகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னாள் மாவட்ட நீதிபதி முசாபர் ஹுசைன் என்பவர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்ட நீதிபதியாக பதவி வகித்த போது நிலம் கையகப்படுத்தும் வழக்கில் மனுதாரருக்கு அதிக இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார்.இந்த விவகாரத்தில் நீதிபதி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவரது ஓய்வூதிய உள்ளிட்ட பலன்களில் 90 சதவீதத்தை பிடித்தம் செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் நீதிபதி ஹுசைன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தனர். அப்போது ”நீதிபதிகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.:
புதுடில்லி:”நீதிபதிகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.