Summer Healthy Foods In Tamil : கோடை காலம் வந்துவிட்டாலே பலரும் வெளியில் செல்ல பயப்படுவார்கள். எந்த வேலை செய்தாலும் வெயிலும், வியர்வையும் நம்மை விரைவில் சோர்வடைய வைத்துவிடும். தண்ணீரில் நனைவதை வி்ட உடல் வியர்வையில் நனைவதே அதிகமாக இருக்கும் இதனால் சிறிய வேலை கூட செய்வது கடினமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் மூச்சுத் திணறல் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. வெயிலின் வெப்பம் உடல் வலிமையை இழக்க செய்வதால் நாம் சோர்ந்து உட்கார்ந்து விடுகிறோம். மேலும் கோடை காலத்தில் பசி குறைவாகவும், தாகம் அதிகமாகவும் இருக்கும், இதனால்தான் உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காமல் சோர்வு, பலவீனம் மற்றும் அமைதியின்மை போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன.
இருப்பினும் சில பயனுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கோடை வெளியில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொளளலாம்.
காலை உணவில் பால், முட்டை
காலை உணவை நன்றாக இருந்தாலே, நாள் முழுவதும் கடினமாக உழைக்கும் வலிமை கிடைக்கும். காலை உணவு ஒரு நபரை ஆரோக்கியமாகவும் நாள் முழுவதும் ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகிறது. எனவே நீங்கள் காலை உணவில் பால் மற்றும் முட்டையை எடுத்துக் கொண்டால், அது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க சிறந்த தேர்வாக இருக்கும்.
முட்டையில் அமினோ அமிலங்கள் மற்றும் நல்ல கொழுப்பு உள்ளது. அதே சமயம் பாலில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அளவு அதிகமாக உள்ளது இதனால் கோடை காலத்தில் காலை உணவுக்கு முட்டை மற்றும் பால் அதிக ஆரோக்கியம் தரும் உணவாகும்.
காலை உணவில் முளைக்கட்டிய பயறு
முட்டை சாப்பிடாதவர்கள் காலை உணவில் முளைக்கட்டிய பயறு, பருப்பு வகைகள், மற்றும் விதைகள் போன்ற தின்பண்டங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இந்த உணவுகளில் போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. கோடையில் உடலில் நீரிழப்பு அதிக ஆபத்து உள்ளது என்பதால் இதனுடன், எலுமிச்சை, பார்லி மற்றும் தேங்காய் தண்ணீர் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
பருவகால பழங்கள்
கோடைக்காலத்தில் தர்பூசணி, பாகற்காய், அன்னாசி, மாம்பழம், ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவை நீர்ப்போக்குதலைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், அவற்றை சாப்பிடுவதற்கு முன் குளிர்சாதன பெட்டியில் அல்லது ஃப்ரீசரில் வைத்து பராமரிக்கவும்.
பச்சைக் காய்கறிகள்
கோடைக்காலத்தில் டவுரி, பாகற்காய், திண்டா, கொத்தமல்லி, ப்ரோக்கோலி, போன்ற காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்., ஏனெனில் இந்த காய்கறிகள் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.
உடலில் தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டாம்
கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம், எனவே அதிகப்படியான வெற்று நீரை குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் உடலில் உள்ள தாதுக்களை வெளியேற்றிவிடும். அதற்கு பதிலாக க்ரீன் டீ, எலுமிச்சைப் பழம் அல்லது புதிய தேங்காய்த் தண்ணீர் குடிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“