நயன்தாரா – விக்னேஷ் திருமணம் திருமலையில் ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதி:பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், திருமலையில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்கள் கடந்த முறை ஏழுமலையான் தரிசனத்திற்கு வந்த போது, திருமலையில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துஇருந்தனர்.
நேற்று காலை வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்து, பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு திரும்பிய அவர்கள், தங்கள் திருமணம் பற்றியதகவலை அறிவித்தனர்.திருமணத்தை திருமலையில் செய்ய உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ”எங்கள் திருமணம்,விரைவில் நடக்கவிருக்கிறது,” என, நயன்தாரா கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.