சென்னை மெரினா கடற்கரையில் மணற்சிற்பத்தை திறந்து வைத்தார் முதல்வர்.!

தமிழகத்தில் திமுக ஆட்சியை பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பதவியேற்று ஓராண்டு நிறைவுற்று இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. 2021 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். திமுக அரசின் ஓராண்டு நிறைவிற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் ஓராண்டு நிறைவையொட்டி மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மணற்சிற்பமானது உதயசூரியன் வடிவத்தில் நடுப்பகுதியில் முதலமைச்சரின் உருவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.