பாக்.,கில் நிலநடுக்கம்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகின.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைக்கிராமத்தில் நேற்று முன் தினம் காலை 11:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இதில், 80 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், 260 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அருகிலுள்ள கிராமங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மலைப் பகுதி என்பதால் மீட்புப் படையினர் உடனடியாக செல்ல முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.மீட்புப் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடாரம், போர்வைகள், உணவுப் பொருள் வழங்க பலுசிஸ்தான் மாகாண முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.