புதுடில்லி:’தேச விரோத சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. ஒரு சில துஷ்பிரயோக சம்பவங்களால் சட்டத்தையே நீக்கக் கூடாது’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தவறாக பயன்படுத்தப்படுவதால் தேச விரோத சட்டத்தை நீக்க உத்தரவிடக் கோரி இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் முன்னாள் மேஜர் ஜெனரல் வோம் பட்கிரி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே விசாரித்துள்ளது. இந்தச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிப்பது உகந்ததாக இருக்காது. ஒரு சில தவறுகள் நடந்துள்ளதால் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று கோருவதை ஏற்க முடியாது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement