முன்னால் சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்று பைக்கில் மோதிய கார்.. பைக்கை ஓட்டி வந்த இளைஞர் கடலில் தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி.!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற கார், பைக் மீது மோதிய நிலையில், பைக்கை ஓட்டி வந்தவர் கடலில் தூக்கிவீசப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். பாம்பன் பாலத்தில் வந்த அவர் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்று எதிரே வந்த பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது.

கார் மோதிய வேகத்தில் பைக்கை ஓட்டி வந்த முகேஷ் என்ற இளைஞர் கடலில் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த நாராயணன் என்பவரும் கீழே விழுந்து காயமடைந்தார்.

கடலுக்குள் விழுந்த இளைஞரை மீனவர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்ட நிலையில், நாராயணன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

பைக் மீது மோதியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மறுமார்க்கத்தில் இருந்த நடைபாதை மீது ஏறி, மின்கம்பம் மோதி நின்றதால், காரில் இருந்த அனைவரும் கடலில் விழாமல் தப்பினர். அத்தோடு, ஏர் பேக் ஓப்பன் ஆனதால் காரை ஓட்டி வந்த கருணாமூர்த்தியும் காயமின்றி தப்பினார். 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.