புதுச்சேரி : நெட்டப்பாக்கம் அருகே குளவி கொட்டியதில் பெண் உயிரிழந்தார்.கோவை மாவட்டம்கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜி, 59; மரம் ஏறும் தொழிலாளி யான இவர், புதுச்சேரி மாநிலம், பண்டசோழநல்லுாரில் பாஸ்கரன் என்பவரின் தென்னந்தோப்பை குத்ததை எடுத்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்
.இவரது மனைவி மாரியம்மாள், 54; கடந்த 5ம் தேதி காலை தேங்காய் எடுத்து வரச் சென்றபோது, அங்கு கூடு கட்டியிருந்த செங்குளவிகள் மாரியம்மாளை சரமாரியாக கொட்டியது.அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஓடிச் சென்று, குளவிகளை விரட்டி, மாரியம்மாளை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் காலை இறந்தார்.இதுகுறித்து அவரது கணவர் ராஜி அளித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி : நெட்டப்பாக்கம் அருகே குளவி கொட்டியதில் பெண் உயிரிழந்தார்.கோவை மாவட்டம்கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜி, 59; மரம் ஏறும் தொழிலாளி யான இவர், புதுச்சேரி மாநிலம்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.