திருப்பதி கோயில் அருகே மடத்தில் நடக்கிறது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜூன் 9ல் காதல் திருமணம்

திருமலை: நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகிலுள்ள ஒரு மடத்தில் வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை விஐபி தரிசனத்தில் நயன்தாராவும், அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கிருந்த ரசிகர்களும், பக்தர்களும் அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொள்ள முயற்சித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து கோயில் முன்பு போட்டோ  மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர். கடந்த வாரம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் ஏழுமலையானை தரிசித்துவிட்டு சென்னை திரும்பினர். இதுகுறித்து அவர்களுடன் வந்தவர்களிடம் விசாரித்தபோது, ‘திருப்பதி ஏழுமலையான் கோயில் சன்னதி அருகே ரீங் ரோட்டிலுள்ள ஒரு மடத்தில், வரும் ஜூன் 9ம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் குறித்து தற்போது அவர்கள் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.