புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தின் அமர்கர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ கஜ்ஜன் மஜ்ரா. இவர் பரோடா வங்கியில் ரூ.40 கோடி கடன் மோசடி செய்துவிட்டதாக வங்கி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரூ.40கோடி மோசடி தொடர்பாக எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கஜ்ஜன் மஜ்ராவிற்கு சொந்தமான பரம்பரை வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.