கோவையில் ‘ஷவர்மா’ கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை.. தரமற்ற முறையில் இருந்த இறைச்சி பொருட்கள் பறிமுதல்..!

கோயம்புத்தூரில் உள்ள ‘ஷவர்மா’ கடைகளில் 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தரமற்ற முறையில் உள்ள இறைச்சி பொருட்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரமற்ற முறையில் இறைச்சி பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.