புதுடில்லி : ஜார்க்கண்டில், அரசு நிதி அபகரிக்கப்பட்ட வழக்கில், மாநில சுரங்கத் துறை செயலருக்கு நெருக்கமான பட்டய கணக்காளரை, அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர்.
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் பணிபுரிந்த ராம் பினோத் பிரசாத் சின்ஹா என்ற இன்ஜினியர், அரசு நிதியில் இருந்து, 18.06 கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2018ல், சின்ஹாவை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மாநில சுரங்கத் துறை செயலருமான பூஜா சிங்காலின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அதில் 19 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சின்ஹா பணியாற்றிய குந்தி மாவட்டத்தில், பூஜா சிங்கால் துணை கமிஷனராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பூஜா சிங்காலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நெருக்கமானவராக கருதப்படும் பட்டய கணக்காளர் சுமன் குமாரை, அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement