ஏனாம் தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கல்

புதுச்சேரி : ஏனாம் தொகுதியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கொல்லபள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோர் மற்றும் விதவைகள் 158பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.தொடர்ந்து வேளாண் துறை சார்பில் 40 விவசாயிகளுக்கு இலவச கொசுவலை வழங்கப்பட்டது.விழாவில் ஏனாம் நிர்வாகி அமன் ஷர்மா, எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கரன், அசோக் பாபு, வேளாண் துணை இயக்குனர் கணேசன்,வேளாண் அதிகாரி ஜோகிராஜு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.