கனடாவில் கடைசியாக 8 மாதங்களுக்கு முன் காணப்பட்ட தமிழ் இளைஞன் நிலை என்ன? வெளியான புகைப்படம்


கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாதக்கணக்கில் காணாமல் போயுள்ளார்.

அவரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி வெங்கடேஷ் கண்ணதாசன் என்ற 31 வயதான இளைஞர் கடைசியாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி காணப்பட்டார்.

Dixon சாலை + Kipling Av பகுதியில் வெங்கடேஷ் கடைசியாக காணப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் வெங்கடேஷை காணவில்லை என நேற்று தான் பொலிசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

கனடாவுக்கு சென்று வேலை செய்ய போகிறோம் என்ற கனவில் மிதந்த நபர்! சுக்குநூறான பரிதாபம்… எச்சரிக்கை செய்தி

6 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட வெங்கடேஷ் சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் தாடி வைத்திருப்பார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூக்கு கண்ணாடியும் வெங்கடேஷ் அணிந்திருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பாதுகாப்பு குறித்து பொலிசார் கவலை கொண்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.