இலங்கையை பொறுத்தவரை சற்று மோசமான நிலை! பிரதமரிடம் நேரடியாக கூறப்பட்ட விடயம் (Video)



 “பிரதமர் பதவியில் நீங்களே தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும், உங்களால் மட்டுமே நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும்” என பிரதமர் மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்த சர்வமதத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்துமத விவகாரங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் கலாநிதி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் கலாநிதி ஹசன் மௌலானா உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள் நேற்று மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரை சற்று மோசமான நிலை காணப்பட்டாலும் அதனை மீட்டெடுத்து நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் திறமை இன்றைய அரசாங்கத்திடமும், குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமுமே இருக்கிறது என பிரதமரிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம், 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.