இஸ்ரேலில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது 3 பேரை கோடாரியால் வெட்டி கொன்ற 2 பாலஸ்தீனர்கள் கைது.!

இஸ்ரேலில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது 3 பேரை கோடாரியால் வெட்டி கொன்ற 2 பாலஸ்தீனர்களை போலீசார் கைது செய்தனர்.

வியாழக்கிழமை முதல், இரவு பகலாக, 70 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில், வனப்பகுதியில் பதுங்கியிருந்த அந்த இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இஸ்ரேலில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களில் 3 போலீசார் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதிலுக்கு இஸ்ரேல் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது ஏற்பட்ட மோதல்களில் பாலஸ்தீனர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.