#தமிழகம் || கொடூரம் – நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்.! உடல்கருகி பலியான உயிர்கள்.! 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு லாரி  தீப்பிடித்ததில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கேயம் அடுத்த ஊதியூர் அருகே : பெங்களூரில் இருந்து இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், காங்கேயத்தில் இருந்து எதிர்திசையில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு லாரி மட்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 3 பேர் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் மூன்று பேரையும் மீட்டனர்.

இதில் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து காங்கயம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.