கடலூரில் உதவி காவல் ஆய்வாளர் கத்தியால் வெட்ட முயன்ற, கஞ்சா வியாபாரி ஒருவனை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே கத்தியை காட்டி ஒருவர் பொதுமக்களை விரட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரையும், அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். மேலும் போலீசாரை கத்தியால் வெட்டுவதற்கும் அந்த நபர் முயன்றுள்ளார்.
பின்னர் ஒருவழியாக பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
மேலும் இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை அடுத்து, மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.