பீஜிங் : சீனாவில் சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் ஷாங்காய் நகரத்தில் மட்டும் 253 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 2020 ஆம் ஆண்டைப் போல கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதற்கு தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சீன பொருட்களின் விற்பனை உலகளவில் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் ஊரடங்கு உள்ளிட்டவை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீஜிங் : சீனாவில் சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.