தானே : கல் குவாரி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த கிராம பஞ்., தலைவர் குடும்பத்தினர் ஐந்து பேர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் டோம்விலி அருகே டெஸ்லாபடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் கெய்க்வாட். பஞ்., தலைவர். இவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர், கிராமத்துக்கு வெளியே உள்ள கல் குவாரி அருகேயுள்ள குளத்தில் துணி துவைக்க சென்றனர்.அப்போது கால் தவறி ஒருவர் தண்ணீருக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்றச் சென்ற மேலும் நான்கு பேரும் தண்ணீருக்குள் விழுந்தனர். இவர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர். 3 மாணவர்கள் பலி ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் ராஜ்ரப்பா என்ற இடத்தில் ராம்கர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு மூன்றாமாண்டு படிக்கும் அணில்குமார் சிங், 22, அபிஷேக் குமார், 21, ரோஹன் குமார் மலாகர், 21 ஆகியோர், அருகிலுள்ள குளத்தில் குளித்தனர். அப்போது ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர்.
தானே : கல் குவாரி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த கிராம பஞ்., தலைவர் குடும்பத்தினர் ஐந்து பேர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் டோம்விலி அருகே டெஸ்லாபடா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.