தமிழ்ப்பெண் ஒருவர் குறித்து கனேடிய பொலிசார் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு! புகைப்படத்துடன் நன்றி தெரிவிப்பு



கனடாவில் காணாமல் போன தமிழ்ப்பெண் ஒருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த 6ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், ப்ரியா கேசவன் (65) என்ற பெண் கடந்த மாதம் 26ஆம் திகதி செவ்வாய் கிழமையன்று பிஞ்ச் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

கனடாவுக்கு சென்று வேலை செய்ய போகிறோம் என்ற கனவில் மிதந்த நபர்! சுக்குநூறான பரிதாபம்… எச்சரிக்கை செய்தி

இதன்பின்னர் ப்ரியா கேசவன் காணாமல் போயுள்ளார் என தெரிவித்திருந்தனர்.
ப்ரியா கேசவனின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு கவலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் ப்ரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை ரொறன்ரோ பொலிசார் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பில் உதவியர்களுக்கு நன்றி எனவும் பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.