வங்க கடலில் இரு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மதியம் ஆழ்ந்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், தென்கிழக்கு வங்க கடலில் ‘அசானி புயல்’ உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தீவிர புயலாக வலுப்பெற்ற அசனி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், நாளை ஆந்திரா-ஒடிசா கடற்கரையை நோக்கி மத்திய கடல் பகுதியில் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் வங்க கடலில் அசானி புயல் உருவானதை குறிக்கும் விதமாக புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் என்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.