கல்யாணம்மா…கல்யாணம்..ஒரே மேடையில் 108 ஜோடிகளுக்கு திருமணம்..ஊரே விழாக் கோலம்!

மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த 108 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

108 ஜோடிகளின் உறவினர்கள் என பெருங்கூட்டத்தினரின் நடத்திய ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடத்தையே விழாக் கோலம் பூண்டது போல் மாற்றியது.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் தடை பட்ட வருடாந்திர நிகழ்வு இந்தாண்டு விமரிசையாக நடைபெற்றது.

பத்திரிக்கை, விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஆகும் செலவுகளின் காரணத்தால் பல்வேறு கிராமங்களில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்று ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதாரத்தால் பின்தங்கிய மக்கள் திருமண செலவுகளை சரிகட்டும் வகையில் ஆண்டு நிகழ்வாக மெகா திருமணம் நடைபெற்றது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.