காத்மாண்டு : நேபாளத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் உலகின் மிகப்பெரிய மலைச் சிகரமான எவரெஸ்ட்டில் 26வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் உலகின் எட்டு உயரமான மலைச் சிகரங்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக இங்கு மலையேற்ற வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுஇருந்தது. கடந்த ஆண்டு முதல் மலைச் சிகரங்களில் ஏற அவர்கள் மீண்டும்அனுமதிக்கப்பட்டனர்.உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட்டில் ஏற 316 பேருக்கு நேபாள அரசு இந்த ஆண்டு அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீட்டா 52, என்பவர்எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் 26வது முறையாக ஏறி தன் பழைய சாதனையை முறியடித்துஉள்ளார். இவர் ‘ஷெர்பா’ எனப்படும் இமயமலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.கமி ரீட்டா உட்பட 11 பேர் அடங்கிய குழு நேற்று முன்தினம் 8848 மீட்டர் உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.
காத்மாண்டு : நேபாளத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் உலகின் மிகப்பெரிய மலைச் சிகரமான எவரெஸ்ட்டில் 26வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.நம் அண்டை நாடான நேபாளத்தில் உலகின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.