‘2 பாஜக எம்எல்ஏக்களைத் தூக்கிடுவோம்’ – திமுக எம்.பி., ட்வீட்டால் பரபரப்பு!

DMK MP Dr Senthilkumar Tweet: பாஜக எம்.எல்.ஏ. இரண்டு பேர் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், தலைமை இசைவு தெரிவித்தால் தூக்கிவிடுவோம் என்றும் திமுக எம்பி செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார்

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, நேற்று பாஜகவில் இணைத்துக்கொண்டார்.கமலாலயத்துக்கு வந்த சூர்யா சிவா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.

பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய சூர்யா சிவா, திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம் என தெரிவித்தார்.

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்திருப்பதை சுட்டிக்காட்டி பாஜக கட்சி உறுப்பினர் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்.பி செந்தில்குமார் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வானதி சீனிவாசன், சரஸ்வதி, நயினார் நாகேந்திரன், காந்தி ஆகிய 4 பேர் மட்டுமே பாஜக எம்எல்ஏ-க்களாக உள்ளனர். செந்தில்குமாரின் பதிவை ஷெர் செய்யும் நெட்டிசன்கள், 4 பேரில் யாரை குறிப்பிட்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பதிவு தமிழக பாஜக வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.