சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலி.!

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள், பைக்கில் தப்பிச் சென்றபோது விபத்தில் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தலைமைச் செயலகம் அருகேயுள்ள இந்தியன் வங்கி அருகே நின்று கொண்டிருந்த கார்த்திக் என்பவரிடம் அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் செல்போனை பறித்து விட்டு, அதிவேகமாக தப்பிச்சென்றனர்.

அப்போது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்ததில், கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விசாரணையில் இருவரும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.