இல்லை என்பதற்கு இவ்வளவு பெரிய விளக்கமா? அமைச்சரை கலாய்த்த அப்பாவு

பால் உணவுத்தொழிற்சாலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் நாசர் விளக்கமளித்தபோது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இல்லை என்பதற்கு இவ்வளவு பெரிய விளக்கமா? என கூறியதால் பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.

பாலமேட்டில் பால் கொள்முதல் நிலையம் உள்ளிட்டவை அமைக்க அரசு முன் வருமா? என சோழவந்தான் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நாசர், மதுரை மாவட்ட பால் கூட்டுறவு உற்பத்தி ஒன்றியத்தில் இருந்து பாலமேடு 27 கிலோ மீட்டர் தொலைவுக்குள் அமைந்திருப்பதால், புதிதாக பால் கொள்முதல் நிலையம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.