உலகின் நன்பர் ஒன் பணக்காரராக அறியப்படும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ
எலான் மஸ்க்
, 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவு, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என்ற இந்த ஒற்றை வரி பதிவு தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்.
அதிர்ச்சிகரமான இந்த ட்விட்டை எலான் வெளியிடுவதற்கு முன்னர், ரஷிய மொழியில் உள்ள ட்வீட் ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார். அதில், ‘உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை நீங்கள் (எலான் மஸ்க்) அளித்து வருகிறீர்கள். என்னதான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ராணுவத்துக்கு எலான் மஸ்க் தொழில்நுட்ர உதவி செய்வதால் ரஷிய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்க வேண்டும். அதன் விளைவாகவே அவர் ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.