6 ரயில் நிலையங்களுக்கு மிரட்டல்| Dinamalar

டேராடூன்,-உத்தரகண்டில் உள்ள ஆறு ரயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ரூர்க்கி நகர ரயில் நிலைய கண்காணிப்பாளருக்கு சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘டேராடூன், ரூர்க்கி, ரிஷிகேஷ், ஹரித்துவார், நஜிபாபாத், லக்ஷர் ஆகியவற்றில் உள்ள ரயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்’ என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆறு ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பியவர் குறித்து விசாரணையும் முடுக்கி விடப்பட்டுஉள்ளது.உத்தரகண்டில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்களில், ‘சார்தாம் யாத்திரை’ துவங்கியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத மிரட்டல் வந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.