பிரதமர் ராஜினாமா : விசேட வர்த்தமானி அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 47(2)(ஆ) ஆம் உறுப்புரையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் பிரதமர் பதவியில் இருந்து 2022 மே மாதம் 09 ஆந் திகதியிலிருந்து ,கேட்டு விலகியுள்ளார் என்று சனாதிபதியின் செயலாளர். காமிணீ செனரத்தினால் இந்த வர்த்மானி அறிவிப்பு நேற்று (09) வெளி யிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிக்கு நேற்று (09) நண்பகல் அனுப்பிவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுவடிவம்

http://documents.gov.lk/files/egz/2022/5/2278-26_T.pdf

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.